செய்திகள் :

அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: 3 பேர் கைது

post image

அயோத்தியில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண் காணாமல் போனதாக பெற்றோா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய கிராமத்துக்கு அருகே உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து அவருடைய உடல் மீட்கப்பட்டதாக போலீஸாா் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

‘எங்களது மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாா். அவருடைய உடலில் ஆழமான காயங்களும், எழும்பு முறிவும் ஏற்பட்டிருந்ததோடு, அவருடைய இரு கண்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன.

சிறைச்சாலையில் கோழிப்பண்ணை! கைதிகளுக்கு கோழிக்கறி! அரசுக்கு ரூ.10 கோடி மிச்சம்!!

இந்த விவகாரத்தில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று அந்த இளம்பெண்ணின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், மாநிலத்தில் தலித் விரோத ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தில்லியில் பிரசாரம் நிறைவு! மும்முனைப் போட்டியில் வெல்வது யார்?

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெற்றது. டிச. 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும் பார்க்க

மகா கும்பமேளா: வசந்த பஞ்சமியையொட்டி 1.25 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் முக்கிய நாளான வசந்த பஞ்சமி புனித நீராடல் இன்று(பிப். 3) நடைபெறுகிறது. வசந்த பஞ்சமி மற்றும் அதற்கு முந்தைய இருநாள்களில... மேலும் பார்க்க

மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி! -ராகுல் காந்தி

‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(பிப். 3) மக்களவையில் குறிப்பிட்டு பேசினார்.அவர் பேசியதா... மேலும் பார்க்க

ஒரே நாடு.. பிரித்துவிடாதீர்கள்: மக்களவையில் கனிமொழி பேச்சு

புது தில்லி: ஒரே நாடு சிதைத்துவிடாதீர்கள் என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் கூறினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வ... மேலும் பார்க்க

பிரதமரை டிரம்ப் ஏன் அழைக்கவில்லை?- மக்களவையில் ராகுல் சர்ச்சைப் பேச்சு

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அமெரிக்கப் பயணம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினரைக் காக்கத் தவறிய மத்திய அரசு: மக்களவையில் கனிமொழி

புது தில்லி: நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என்று மக்களவையில் திமுக எம்.பி. க... மேலும் பார்க்க