செய்திகள் :

அரசின் அக்கறையின்மையே உயிரிழப்புக்குக் காரணம்: மாயாவதி

post image

பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசலுக்குக் கர்நாடக அரசின் தவறான நிர்வாகமே காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கண்டம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெறும் 35 ஆயிரம் பேர் மட்டுமே நுழைய இடமிருந்த சின்னசாமி அரங்குக்குள் 3 லட்சம் பேர் நுழைந்ததும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, நெரிசலை ஏற்படுத்தியதற்காக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதைப் போல, சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் கைது செய்யப்படுவார்களா? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து இன்று மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களுடன் மாயாவதி பேசுகையில்,

அரசுத் திட்டங்களில் தீவிரமாகவும், உணர்திறன் மிக்கதாகவும் இல்லாததால், ஒவ்வொரு முறையும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது மிகுந்த கவலைக்குரியது. மாநில அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

பெங்களூரில் நிகழ்ந்த இந்த சம்பவம் கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு துயர நிகழ்வாகும். நாட்டின் அரசியலில் எதிர்மறை, வெறுப்பு, விரோதம், குறுகிய மனப்பான்மை, ஒருவருக்கொருவர் எதிராக வழக்குத் தொடருதல் ஆகியவை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஏதோ ஒரு பிரச்னையில் தலைவர்களின் முரட்டுத்தனமான மற்றும் அநாகரீகமான நடத்தையால் பொதுமக்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். நாட்டில் உள்ள நச்சு சூழல் அதன் வளர்ச்சி மற்றும் சுயச்சார்பு முயற்சிகளை நேரடியாகத் தடுக்கிறது.

நாட்டின் பணக்காரர்களின் செல்வம் இப்போது பெரும்பாலும் வெளிநாட்டு முதலீடுகளுக்குச் செல்கிறது, இதன் காரணமாக வறுமை, வேலையின்மை, கல்வியறிவின்மை மற்றும் பின்தங்கிய நிலை போன்ற எரியும் பிரச்னைகள் இன்னும் தீவிரமாகி வருகின்றன என்று அவர் கூறினார்.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க