செய்திகள் :

`அரசியலமைப்பு தான் அனைத்திற்கும் பிரதானம்..!' - துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா கண்டனம்

post image

"அரசியல் சாசனப் பிரிவு 142, ஜனநாயக சக்தியின் மீது நீதித்துறை தொடுக்கும் அணு ஏவுகணையாக மாறிவிட்டது. இது 24x7 செயல்பட்டு வருகிறது. ஒரு ஜனாதிபதியை உத்தரவிடும் சூழ்நிலையை நாம் ஏற்றுகொள்ள முடியாது.

அரசியலமைப்பின் பிரிவுகளில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை சொல்வது தான் உங்களுக்கு அரசியலமைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட ஒரே உரிமை" என்று உச்ச நீதிமன்றத்தை சாடி துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியிருந்தார்.

முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஆர்ட்டிக்கிள் 142 -ஐ பயன்படுத்தி கிடப்பில் இருந்த 10 மசோதக்களுக்கு ஒப்புதல் வழங்கி இருந்தது.

அதற்கு பதிலளிக்கு விதமாக, திமுக எம்.பி திருச்சி சிவா, "அரசியலமைப்பின் கீழ், நிர்வாகம், சட்டமன்றம், நீதி ஆகியவை தனித்தனி அதிகாரங்களை கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்த மூன்றும் இயங்கினாலும், அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட மிக பிரதானம்.

சமீபத்தில், அரசியலமைப்பு பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றம் கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதி குறித்து கொடுத்த தீர்ப்பில், 'அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் உட்பட யாரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதோவை தாமதப்படுத்தவோ, நிறுத்திய வைக்கவோ முடியாது' என்பது தெளிவாகிறது. அப்படி செய்தால், அது அரசியலமைப்பிற்கு எதிரானது.

இந்தத் தீர்ப்பு குறித்தான துணை ஜனாதிபதியின் விமர்சனம் நியாயமில்லாதது. இந்தியாவில் 'சட்டத்தின் ஆட்சி' தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' - நயினார் நாகேந்திரன்

கோவை காளப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அந்தக் கட்சியினர் சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “கூட்டணி, எத்தன... மேலும் பார்க்க

'கூட்டணி வேறு... கொள்கை வேறு; வக்பு சட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளோம்' - வேலுமணி

கோவை அதிமுக சார்பில் நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமண க... மேலும் பார்க்க

'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனிவாசன்

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் கோவை வருகை புரிந்தார். அவருக்கு கோவை பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெ... மேலும் பார்க்க

`இறந்து' விட்டதாக இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு; ஆம்புலன்ஸில் திடீரென அசைந்த உடல்... என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், தோகைபாடியை சேர்ந்தவர் பிரகாஷ். மிகுந்த உடல் நலக்குறைகளுடன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 10 நாள்களாகத் தீவிர சிகிச்சை பெற்று ... மேலும் பார்க்க

`மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு'- மராத்திக்காக பகையை மறந்து கூட்டணி சேரும் தாக்கரே சகோதரர்கள்?

மகாராஷ்டிரா பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை வரும் கல்வியாண்டில் இருந்து இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் மாநில அரசு கூடுதலாக ஒ... மேலும் பார்க்க

துரை வைகோ Vs மல்லை சத்யா: வெடித்துக் கிளம்பிய உட்கட்சி பஞ்சாயத்து!

ம.தி.மு.க-வின் முதன்மைச் செயலாளரும் திருச்சி தொகுதியின் எம்.பி-யுமான துரை வைகோ, இன்று (ஏப்ரல் 19-ம் தேதி) வெளியிட்டிருக்கும் விரிவான அறிக்கையில், "அரசியல் பொதுவாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்... மேலும் பார்க்க