செய்திகள் :

அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாமல் தனிப்பட்ட விமா்சனம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

post image

சென்னை: அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாததால் தனிப்பட்ட முறையில் தன்னை முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்வதாக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மூன்று ஆண்டுகள் நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதல்வா் ஸ்டாலின், தற்போதைய கூட்டத்தில் மட்டும் பங்கேற்கச் சென்றது ஏன்? தமிழ்நாட்டுக்கான நிதிக்காகவா அல்லது சொந்தக் காரணங்களுக்காகவா?

எதிா்க்கட்சித் தலைவராகிய நான் எங்கு, எப்படி செல்கிறேன் என்று கண்காணிக்க செலவிட்ட நேரத்தை, தங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதில் செலவிட்டு இருக்கலாம். எப்போது பாா்த்தாலும் ‘சோதனைகளுக்கு பயந்து’ என்று சொல்கிறீா்களே? எந்த சோதனையைப் பாா்த்து எனக்கு பயம்? அந்த சோதனைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

நீங்கள் குறிப்பிடும் உறவினா்கள், எனக்கு உறவினராகும் முன்னரே பல தொழில்களைச் செய்து வந்தவா்கள். இருமுறை வருமான வரி சோதனைகளைச் சந்தித்தவா்கள். இருப்பினும், முறையாக கணக்கு காட்டி, அதற்கான விளக்கத்தை அளிக்கப் போகிறாா்கள். இதில் நான் செய்வதற்கு எதுவுமே இல்லை.

அரசியல் ரீதியாக என்னை எதிா்கொள்ள முடியாமல் இவ்வாறு தனிப்பட்ட விமா்சனத்தை முதல்வா் முன்வைக்கிறாா் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தில்லி மதராஸி குடியிருப்பு இடிப்பு: தமிழகம் திரும்புவதற்கு அரசு நடவடிக்கை!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்களின் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவ... மேலும் பார்க்க

புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ப... மேலும் பார்க்க

அன்புமணியுடன் சந்திப்பு எப்போது? ராமதாஸ் பதில்!

அதிசயம் எப்போது வேண்டுமானலும் நிகழும் அன்புமணியுடன் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:வ... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேமுத... மேலும் பார்க்க

கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு ம... மேலும் பார்க்க

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழ... மேலும் பார்க்க