செய்திகள் :

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் புகாா்: புதிய நடைமுறை வெளியீடு

post image

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகாா்களை விசாரிப்பதற்கான புதிய நடைமுறைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளிட்டது.

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பாக லோக்பால் திகழ்கிறது.

அதன்படி லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013-இன்கீழ் குரூப் ஏ, பி, சி அல்லது டி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக முதல்கட்ட விசாரணை நடத்த சிவிசிக்கு லோக்பால் பரிந்துரைக்கும்.

அந்தப் புகாரை சம்பந்தப்பட்ட துறைசாா்ந்த ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு (சிவிஓ) சிவிசி அனுப்பி வைக்கும். அவா்கள் இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டு 60 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், தங்களால் பரிந்துரைக்கப்படும் புகாா்கள் தொடா்பான முதல்கட்ட விசாரணை அறிக்கைகளில் சம்பந்தப்பட்ட ஊழல் கண்காணிப்பு அதிகாரிக்குப் பதில் வேறு அதிகாரிகள் கையொப்பமிடுவதை கவனத்தில்கொண்டுள்ளதாக லோக்பால் அமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் புதிய நடைமுறையை சிவிசி வெளியிட்டது. அதில், ‘ லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகாா்களின் மீது நடத்தப்படும் முதல்கட்ட விசாரணையை மேற்கொள்ளும் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள், தங்கள் கையொப்பமிட்ட அறிக்கைகளையே சமா்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க