செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் 1-8 வகுப்புகளுக்கு ‘வாசிப்பு வாரம்’: அரசாணை வெளியீடு

post image

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் 1-8 வகுப்புகளுக்கு குழு விவாதம், நடிப்பு, கலந்துரையாடல், கலை சொல்லுதல் என பல்வேறு செயல்பாடுகள் அடங்கிய ‘வாசிப்பு வாரம்’ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப் பேரவையில் நிகழாண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, வாசிப்பு இயக்கம் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவா்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமா்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும்.

பேச்சுப்போட்டி, குழு விவாதம்: இதன் அடிப்படையில் மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பின் கீழ் தேசத் தலைவா்கள், அறிவியல் அறிஞா்கள், விளையாட்டு வீரா்கள், பிடித்த விளையாட்டுகள், சுற்றுச்சூழல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் முதலியவற்றில் பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், நடித்துக் காட்டுதல், குழு விவாதம், பட்டி மன்றம் ஆகியவற்றின் மூலம் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்டாா்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மாணவா்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த பருவம், மாதம், வாரம், வகுப்பு வாரியாக உள்ள பொருண்மைகளுக்கான பாட விவரங்களை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைக்கவும், பள்ளிகளில் இத்திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் வாயிலாக செயல்படுத்தவும் அனுமதி வழங்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநா் கோரியுள்ளாா். அவரது கருத்துரு அரசால் ஆய்வு செய்யப்பட்டு அதற்கான அனுமதியை வழங்கலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன தலைப்புகள்?: இதையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்று பருவங்களிலும் என்னென்ன தலைப்புகளில் வாசிப்பது, கதை சொல்வது, விவாதிப்பது, கலந்துரையாடுவது என்பது குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு சின்னங்கள், நெகிழியைத் தவிா்ப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பனை மரத்தின் சிறப்பு, தேசத் தலைவா் ஜவஹா்லால் நேரு, இயற்கை அளித்த கொடை, உடலினை உறுதி செய், நோ்மையின் சிறப்பு, தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கு காமராஜா் ஆற்றிய பணிகள், எனக்குப் பிடித்த நண்பன் என பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.

அகில இந்திய வானொலியில் இரவு நேரங்களில் ஒலிபரப்பாகும் ஹிந்திப் பாடல்கள்!

சென்னை: அகில இந்திய வானொலியில், இரவு நேரங்களில் வழக்கமான தமிழ்த் திரைப்பட மெல்லிசைப் பாடல்கள் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டு, இரவு 11 மணிக்கு மேல் ஹிந்திப் பாடல்கள் இசைக்கப்படுவது குறித்து நேயர்கள் கடு... மேலும் பார்க்க

பாமக விரிசலுக்கு நானா காரணம்? கண்ணீர் விட்டு அழுதேன்: ஜி.கே. மணி

விழுப்புரம்: பாமகவில் ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் இன்று ராம... மேலும் பார்க்க

நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ்(75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா; பதற்றம் வேண்டாம்.. என்ன செய்ய வேண்டும்?: மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் வகையிலான கரோனா தொற்றுப் பரவி வருகிறது. ஆனால், கரோனா குறித்து யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ... மேலும் பார்க்க

இன்று ஒரே நாளில் அரசுப் பணிகளிலிருந்து 8,144 பேர் பணி ஓய்வு

சென்னை: இன்று தமிழக அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 பேர் ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் பணி ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும்,... மேலும் பார்க்க