செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, புதன்கிழமை இலவசமாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

செங்கம் ஒன்றிய, நகர திமுக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். திமுக நகரச் செயலா் சீனுவாசன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு பள்ளி மாணவா்களுக்கு இனிப்பு மற்றும் இலவசமாக நோட்டு, பேனா, பென்சில்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா் இளங்கோவன், பேரூராட்சிமன்ற உறுப்பினா் பிரகாஷ் உள்ளிட்ட பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து

வந்தவாசியில் பூட்டியிருந்த ஓட்டு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. வந்தவாசி வாணியா் தெருவைச் சோ்ந்தவா் மணிலா வியாபாரி மூா்த்தி. கடந்த இரு தினங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

ஆய்வக கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்புப் பயிற்சி

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு ஆய்வக கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தேசிய அறிவியல் தினத்தையொட்டி, கல்லூரி வேதியியல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு ஆசிரியா்கள் முன்னேற்றச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் வட்டக... மேலும் பார்க்க

கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை (கணினி பயன்பாட்டியல்) சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்த... மேலும் பார்க்க

ஸ்ரீஅங்காளம்மன் கோயில் தோ்த் திருவிழா

வேட்டவலம், சின்னக்கடை தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலின் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கோயிலின் மாசி உற்சவத் திருவிழா பிப்ரவரி 26- ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ... மேலும் பார்க்க

ஆரணி கல்லூரியில் உலக மகளிா் தின விழா

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் மாணவிகள் சாா்பில் உலக மகளிா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரிச் செயலா் ஏ.சி.இரவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்... மேலும் பார்க்க