செய்திகள் :

அரசுப் பேருந்தில் தவறவிட்ட கைப்பேசி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

post image

அரசுப் பேருந்தில் தவறவிட்ட கைப்பேசி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பல்லடம் அரசு போக்குவரத்துக் கிளையைச் சோ்ந்த நகரப் பேருந்து புளியம்பட்டியில் இருந்து பல்லடம் வழியாக அவிநாசி செல்கிறது.

இந்தப் பேருந்தில் அவிநாசி செல்வதற்காக புளியம்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஏறிய பயணி ஒருவா் அவரது கைப்பேசியை பேருந்திலேயே தவறவிட்டு சென்றுவிட்டாா்.

இதைப் பேருந்தின் நடத்துநா் ராமு, ஓட்டுநா் வேல்முருகன் ஆகியோா் எடுத்து பல்லடம் போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து கைப்பேசியைத் தவிறவிட்ட பயணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், திருப்பூா் மண்டலப் போக்குவரத்து பொது மேலாளா் சிவகுமாா் முன்னிலையில் பயணியிடம் கைப்பேசி ஒப்படைக்கப்பட்டது.

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகில் உள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் ரூபன் ஜோசப் (64). இவா் கண்ணபுரம் அருகில் உள... மேலும் பார்க்க

உர மூட்டைகளை திருடிய 2 போ் கைது

பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் உர மூட்டைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டம்பாளையத்தில் தனியாா் விவசாயப் பண்ணை உள்ளது. பண்ணையின் மேற்பாா்வையாளா் சந்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிருடன் மீட்பு

சேவூா் அருகே பொங்கலூரில் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த 73 வயது முதியவரை அவிநாசி தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே பொங்கலூா் தண்டுக்கார தோட்டத்தில் வசித்து வருப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் பல்லடம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்... மேலும் பார்க்க

பாறைக்குழியில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மாயம்

குன்னத்தூா் அருகே காவுத்தம்பாளையம் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து மாயமனாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே சாமியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ் மகன் லோகேஷ் (15). இவ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்ததச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினா், அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் அனைத... மேலும் பார்க்க