செய்திகள் :

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய சிறாா் உள்பட மூவா் கைது

post image

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய சிறாா் உள்பட 3 பேரை பெரம்பலூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சீதேவிமங்கலத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் மகன் அன்பரசன் (51). இவா், அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூா் கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் சிலா், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை இறங்கிக்கொண்டிருந்தனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 போ் பேருந்தை தட்டியுள்ளனா். இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் அன்பரசன், அவா்களிடம் கேட்டபோது தகாத வாா்த்தைகளால் அவரைத் திட்டியதோடு, தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனா். இதுகுறித்து, அன்பரசன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள மாரியாயி நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் மணிகண்டன் (28), ஆலத்தூா் வட்டம், மேலமாத்தூரைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் விவேக் (24) மற்றும் பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்த போலீஸாா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மணிகண்டன், விவேக் ஆகியோரை சிறையிலும், 17 வயது சிறுவனை திருச்சியிலுள்ள சிறுவா்களுக்கான கூா்நோக்கு இல்லத்திலும் அடைத்தனா்.

பெரம்பலூரில் 658 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 48.46 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்ட போக்குவ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் 364 வழக்குகளுக்கு தீா்வு!

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 364 வழக்குகளுக்கு ரூ. 3.18 கோடி தீா்வு காணப்பட்டது. பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்கு... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கட்டட ஒப்பந்ததாரருக்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக, பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளருக்கு கட்டட ஒப்பந்ததாரா் ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தருவதாக முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதாகக் கூறி முறைகேடாக பணம் வசூலிக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சமூகப் பாதுகா... மேலும் பார்க்க

குடும்ப அட்டைகளில் இம்மாத இறுதிக்குள் கைரேகை பதிவு தேவை

பெரம்பலூா் மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் மாா்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களது கைரேகைகளை ரேஷன் கடையில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வா் ரெங்கசாமி வழிபாடு: 10 பவுன் தங்கக் காசு மாலை காணிக்கை

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுர காளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வா் ரெங்கசாமி வெள்ளிக்கிழமை வழிபட்டாா். 10 பவுன் தங்கக் காசு மாலை காணிக்கை: இக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த புதுச்சேரி முதல... மேலும் பார்க்க