செய்திகள் :

அரசுப் பேருந்து - பைக் மோதல்! பெண் உள்பட இருவர் பலி!

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நூற்பாலை தொழிலாளிகள் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பூவன்கிழவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (24). இவரது உறவினர் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (22). இவர்கள் இருவரும் வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலையிலல் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியும் புவனேஸ்வரியும் பூவன்கிழவன்பட்டியில் தங்கிவிட்டு, இன்று காலை வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலைக்கு பணிக்கு சென்றுள்ளனர். செல்லும் வழியில், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப கோபால்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பகுதியில் சாலை கடக்க முற்பட்டபோது, திண்டுக்கலில் இருந்து நத்தம் நோக்கி வந்த அரசுப் பேருந்து பாலசுப்பிரமணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், இருவரையும் பொதுமக்கள் மீட்டு 108 அவசர ஊர்தியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், மருத்துவமனை செல்லும் வழியிலேயே இருவரும் இறந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூற்பாலை பணிக்காக சென்ற இருவர் அரசுப் பேருந்து மோதி பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாள்கள் கடுமையான வெய்யில் இருந்து வந்த நிலையில் இன்று(புதன்கிழமை) மாலை பல பகுதிகளில் லேசான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் இரவு வரை மழை நீடிக்கும்!

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்றிரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.அடுத்த 2 மணி நேரத்துக்கு இன்று(செப். 10) மாலை 6 மணிக்குள்ளாக திருவள்ளூர், செங்கல... மேலும் பார்க்க

கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

உத்தமபாளையம்: கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் மொத... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

கட்சி இணைந்தால் இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில்

கட்சியை ஒன்றிணைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்... மேலும் பார்க்க