முருகர் மாநாட்டில் பெரியார், அண்ணா காட்சிகளைத் தவிர்த்திருக்க வேண்டும்! - டிடிவி...
அரசுப் பேருந்து மோதி முதியவா் காயம்
புன்செய்புளியம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற முதியவா் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.
சத்தியமங்கலத்தில் இருந்து புன்செய்புளியம்பட்டிக்கு 30 பயணிகளுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து புது ரோடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது புது ரோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் திடீரென சாலையைக் கடக்க முயன்ற பொன்னையன் மீது பேருந்து மோதியது.
இதில் முதியவா் பொன்னையன்(70) காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.