செய்திகள் :

கண்ணாமூச்சி ஆடும் ஈரான்-இஸ்ரேல்! இறங்கி அடித்துவிட்டு போர் நிறுத்தமா?

post image

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் முடிவாகியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலின் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கத்தார், ஈராக், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவும் என்ற உச்சக்கட்ட அபாய நிலையில் போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் அறிவித்தார்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் வடக்கு மற்றும் மத்திய நகரங்கள் மீது போர் விமானங்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு குண்டுகளை மழைபோல் வீசித்தாக்குதல் நடத்தியிருக்கிறது. அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்தம் இன்று காலை 4 மணி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் 3 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பரம எதிரிகளுக்கு இடையேயான போர் 12வது நாளை எட்டியிருக்கும் நிலையில், போர் ஒப்பந்தம் எதுவும் இதுவரை முடிவாகவில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் செயத் அப்பாஸ் அரக்சி, போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என்பது போன்று சூசகமாக அறிவித்திருந்தார். ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.

இந்த நிலையில்தான், மிகக் காட்டமான பதிவு ஒன்றை ஈரானின் புரட்சிகர காவல்படை வெளியிட்டது. அதில், முட்டாள்தனமான மற்றும் அறிவில்லாத அமெரிக்க அதிபரை நாங்கள் எச்சரிக்கிறோம், ஒருவேளை, ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு உண்டான தக்கப் பாடம் கற்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

அது மட்டுமல்லாமல், இஸ்ரேலின் ரமத் கன், டெல் அவிவ் மக்களை, வெளியேறுமாறும், நாங்கள் குண்டுகளை வீச திட்டமிட்டுள்ளோம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இவ்விரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில்தான், மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தம் கூறித்துப் பேசியிருக்கிறார்.

அதாவது, இப்போது முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. தயவுசெய்து அதை மீறாதீர்கள் என்று ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இன்று அதிகாலை ஈரான் மீது கொத்து கொத்தாக குணடுகளை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், தற்போது போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஒரு பக்கம் டிரம்ப் போர் நிறுத்தம் அறிவித்திருக்கும் நிலையில், இரு நாடுகளும் அதனை ஏற்காததால், அடுத்தடுத்து வரும் தாக்குதல் மற்றும் அறிவிப்புகள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதலா? - ஈரான் மறுப்பு

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் 12 நாள்களுக்குப் பிறகு முடிவுக்... மேலும் பார்க்க

உணவுக்காக காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கட... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் ஏற்பு! இஸ்ரேலின் வான்வழி மீண்டும் திறப்பு!

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால், மூடப்பட்ட இஸ்ரேலின் வான்வழிப் பாதைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் 12 நாள்களாக நடைபெற்று வந்த போரானது நிறுத்தப்படுவதாக,... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிரதமர்

ஈரானுடனான போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாகவும் ஈரானுக்கு எதிராக அனைத்து போர் இலக்குகளையும் அடைந்துவிட்டதாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரா... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்! - டிரம்ப்புக்கு நெதன்யாகு நன்றி

ஈரானுடனான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.இருநாடுகளும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

ஆபரேஷன் சிந்து மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரான் நாட்டில் சிக்கியிருந்த 292 இந்தியர்கள் இன்று (ஜூன் 24) காலை தாயகம் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால், இருநாடுக... மேலும் பார்க்க