செய்திகள் :

போர் நிறுத்தம் ஏற்பு! இஸ்ரேலின் வான்வழி மீண்டும் திறப்பு!

post image

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால், மூடப்பட்ட இஸ்ரேலின் வான்வழிப் பாதைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் 12 நாள்களாக நடைபெற்று வந்த போரானது நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 24) காலை அறிவித்தார். ஆனால், இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களை ஈரான் ராணுவம் தொடர்ந்து நடத்தி வந்தது.

இதனால், அந்நாட்டுக்கு இயக்கப்பட்ட அவசரகால சிறப்பு விமானங்கள் உள்பட அனைத்து பயணிகள் விமானங்களின் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு, அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் அதன் வான்வழிப் பாதைகள் முழுவதுமாக மூடப்படுவதாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்நிலையில், தற்போது போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஈரானும் போர்நிறுத்தத்தை ஏற்பதாக, அந்நாட்டு அரசின் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து இயக்கப்படும் அவசரகால சிறப்பு விமானங்களுக்காக மட்டும் அந்நாட்டின் வான்வழிப் பாதை மீண்டும் திறக்கப்படுவதாக, இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரினால், இருநாடுகளும் தங்களது வான்வழிப் பாதைகளை மூடின. இருப்பினும், அந்நாடுகளில் சிக்கியுள்ள வெளிநாட்டவரை மீட்பதற்காக சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா எனத் தெரியவில்லை: ரஷியா கருத்து

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது தெரியவில்லை என ரஷியா கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் 12 நாள்களுக்குப் பிறகு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க

கிரீஸ் தீவில் 3வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ! போராடும் தீயணைப்புப் படை!

கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவில், 3-வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டின் நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படை வீரர்கள் போராடி வருகின்றனர். கிழக்கு ஏகன் தீவான சியோஸிலுள்ள, வனப்பகுதி ம... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதலா? - ஈரான் மறுப்பு

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் 12 நாள்களுக்குப் பிறகு முடிவுக்... மேலும் பார்க்க

உணவுக்காக காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கட... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிரதமர்

ஈரானுடனான போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாகவும் ஈரானுக்கு எதிராக அனைத்து போர் இலக்குகளையும் அடைந்துவிட்டதாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரா... மேலும் பார்க்க

கண்ணாமூச்சி ஆடும் ஈரான்-இஸ்ரேல்! இறங்கி அடித்துவிட்டு போர் நிறுத்தமா?

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் முடிவாகியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலின் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.இஸ்ரேல் -... மேலும் பார்க்க