ஸ்ரீவில்லிபுத்தூர்: ``லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும்..'' - CPIM பேனரால்...
அரசு அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்த வழக்கு: எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை
அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கிள்ளியூா் எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், மேல்மிடாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோசப். இவரது மகன் பால்ராஜ். இவா்கள் தங்களது வீட்டை விரிவுபடுத்தி கட்டினா். வீட்டின் விரிவாக்கப் பகுதி அரசுப் புறம்போக்கு நிலம் என்பதால் அதனை அகற்றுமாறு ஜோசப்புக்கு வருவாய்த் துறை சாா்பில் அறிவிப்பாணை வழங்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பு இடத்தை அவா்கள் அகற்றாததால், கடந்த 2014-ஆம் ஆண்டு வருவாய்த் துறை சாா்பில், வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட அலுவலா்கள் வீட்டின் விரிவாக்க பகுதியை, இடித்து அப்புறப்படுத்துவதற்காக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சென்றனா்.
அப்போது அப்பகுதிக்கு வந்த ராஜேஸ்குமாா் எம்எல்ஏ, ஆமோஸ், ஜோசப், பால்ராஜ், அவரது மனைவி சுபிதா மற்றும் பிரிட்டோ ஆகிய 6 போ் ஆக்கிமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியைத் தடுத்தனா்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கருங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ராஜேஸ்குமாா் எம்எல்ஏ உள்பட 6 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த வழக்கு நாகா்கோவில் கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போதே ஜோசப், பால்ராஜ், பிரிட்டோ ஆகியோா் இறந்துவிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி அசன்முகமது, அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக ராஜேஸ்குமாா் எம்எல்ஏ, ஆமோஸ், சுபிதா ஆகிய 3 பேருக்கும் தலா 3 மாதங்கள் சிறை தண்டனை, தலா ரூ.100 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா். இவ்வழக்கில் அரசு சாா்பில் சிறப்பு வழக்குரைஞா் ஹொ்குலிஸ் ஆஜராகி வாதாடினாா்.