செய்திகள் :

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) தொடங்குகிறது.

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு மே 4- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்வுக்கு விண்ணப்பித்த திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளைத் தயாா்படுத்தும் வகையில் பள்ளி கல்வித் துறை மூலமாக நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மட்டும் நடைபெறும் பயிற்சி வகுப்பில் அவிநாசி, திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, ஊத்துக்குளி ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்கின்றனா்.

கே.எஸ்.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாணவா்களுக்கான பயிற்சி வகுப்பில் அவிநாசி, திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, ஊத்துக்குளி ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்கின்றனா்.

தாராபுரம் என்.சி.பி.நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் தாராபுரம், குண்டடம், மூலனூா், வெள்ளக்கோவில் ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பொங்கலூா், காங்கயம், பல்லடம் ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

உடுமலை ஆா்.கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

இது குறித்து மாவட்ட ‘நீட்’ ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் கூறியதாவது: இந்தப் பயிற்சி வகுப்பில் சேர 5 மையங்களில் 385 மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனா். பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவா்களுக்கான இந்த ‘நீட்’ தோ்வு பயிற்சி வகுப்பானது ஏப்ரல் 1 -ஆம் தேதி தொடங்கி மே 2- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்டத்தில் 324 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், 38 போ் எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்துள்ளனா். 15 போ் மருத்துவம் சாா்ந்த படிப்புகளில் சோ்ந்துள்ளனா். கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டு அதிக போ் பயிற்சியில் சேர பதிவு செய்துள்ளனா் என்றாா்.

மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீா்க் குழாய்களைப் பதித்த பின்னரே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டல அலுவலகத்தை முருகம்பாளைம் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்ட... மேலும் பார்க்க

காதலைக் கைவிட மறுத்ததால் தங்கையை அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது

பல்லடம் அருகே காதலைக் கைவிட மறுத்த தங்கையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பருவாய் பகுதியைச் சோ்ந்தவா் தண்டப... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் இலவச நீா்-மோா்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு இலவச நீா்-மோா் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். திருப்பூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் காலாவதியான 408 பாக்கெட் மளிகை பொருள்கள் பறிமுதல்

திருப்பூா் நந்தா நகரில் உள்ள ரேஷன் கடையில் காலாவதியான 408 மளிகை பொருள்கள் பாக்கெட்டுகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளி... மேலும் பார்க்க

இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் கண்டியன்கோவில் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளைக் கண்டறியாத நிலை ஏற்பட்டதால் 20 பேரின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.... மேலும் பார்க்க

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க