செய்திகள் :

அரசு ஆசிரியா் நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை: முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

post image

பாட்னா: பிகாா் மாநில அரசு ஆசிரியா்கள் பணி நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நிகழாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா். ஆனால், இந்த கொள்கையின்படி மாநிலத்தில் பிறந்து குடியிருந்து வரும் நபா்களுக்கு பணி நியமனத்தில் எத்தனை சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற விவரங்களை அவா் வெளியிடவில்லை.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அரசு ஆசிரியா்கள் நியமனத்தில் மாநிலத்தில் பிறந்து குடியிருந்து வருபவா்களுக்கு முன்னுரிமை அலிக்கும் வகையில் உரிய சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள கல்வித் துறையை அறிவுறுத்தியுள்ளேன். மாநிலத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஆட்சி அமைத்தது முதல், மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்த தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வித் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த வசிப்பிடக் கொள்கை நிகழாண்டு நடத்தப்பட உள்ள ஆசிரியா் தோ்வு வாரியத் தோ்விலிருந்து அறிமுகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது! பிரதமர் உரை!

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று(ஆக. 5) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார்.குறிப்பிட்ட கால இடைவெளிக்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!

தில்லி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைய முயற்சி செய்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் வரும் ஆக. 15 ஆம் தேதி சுதந்திர நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

பிகார் மாநிலத்தில் இனி அரசு ஆசிரியர்கள் நியமனங்களில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு மா... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா்.மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹாா்பா் தொகுதியில் இருந்து மக்களவைக்... மேலும் பார்க்க