காஷ்மீர்: காவாவும் குல்மார்க்கும்; தல் ஏரியில் ஒரு மாய இரவும்
அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 86 போ் கைது
தேனியில் வியாழக்கிழமை வாழ்வூதியம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 86 போ் கைது செய்யப்பட்டனா்.
திமுக அரசு 2021 தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி வருவாய்த் துறை, கிராம உதவியாளா், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், ஊராட்சிச் செயலா்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்கக் கோரியும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், காசநோய் தடுப்புத் திட்ட ஊழியா்கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், ஆதிதிராவிடா் நலத் துறை தூய்மைப் பணியாளா்கள், மக்கள் நலப் பணியாளா்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், சாலை மறியல் போராட்டம் தேனி பங்களாமேட்டில் நடைபெற்றது.
இதற்கு மாவட்டத் தலைவா் அ.உடையாளி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு.விஸ்வநாதன் விளக்கவுரையாற்றினாா். மாநில பொதுச் செயலா் ரா.வாசுகி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். மாநில துணைத் தலைவா் ம.முகமது அலி ஜின்னா சிறப்புரையாற்றினாா். சாலை மறியல் போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியா் சங்கத்தினா் பங்கேற்றனா். இவா்களில் 86 பேரை தேனி போலீஸாா் கைது செய்தனா்.