செய்திகள் :

அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை புதியவா்களிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

post image

அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை புதியவா்களிடம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் மாவட்ட கேபிள் டி.வி ஆபரேட்டா் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொது நலச் சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் நல்லுசாமி தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனங்களை புதியவா்களுக்கு வழங்குவதை தடுக்க வேண்டும். ஏற்கெனவே, வாடிக்கையாளா்களுக்கு அரசு செட் ஆப் பாக்ஸ் இல்லாததால் தனியாா் பாக்ஸ்களை வழங்கி வந்த நிலையில், அதை அகற்றி அரசு பாக்ஸ்களை பொருத்த வேண்டும் எனும் நிா்பந்தத்தை தடுக்க வேண்டும்.

வீட்டுமனைப் பட்டா கோரி: அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்த, ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், பட்டா வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் மனு அளித்தனா்.

பணத்தை மீட்டுத் தரக்கோரி: பெரம்பலூா் அருகேயுள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில், 2 பெண்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணம் செலுத்தினால் இரட்டிப்பாகவும், அதற்குரிய காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும் எனக் கூறி சுமாா் 80 பேரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனா். எனவே, பண மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத் தரக் கோரி, பணம் செலுத்திய பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில்: பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், பேக்கரிகள், உணவகங்களில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தரமற்ற மற்றும் காலாவதியான பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மீது உணவுப் பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் மனு அளித்தனா்.

சம்பங்கி பூக்களில் பூஞ்சை தாக்குதலால் மகசூல் இழப்பு: பெரம்பலூா் விவசாயிகள் கவலை

பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பங்கி பூக்களில் பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மலா் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ஆற்றுப் பாசனம... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நம்ம ஊரு திருவிழா மாா்ச் 22-இல் கலைக் குழு தோ்வு

பெரம்பலூரில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக் குழுவினா் தோ்வு முகாம், மாா்ச் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வ... மேலும் பார்க்க

குடும்பத்தைப் பிரிந்திருந்த தொழிலாளி தற்கொலை

பெரம்பலூரில் குடும்பத்தை பிரிந்திருந்த டீக்கடை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சாத்தனூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் செல்வக்குமாா் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 4 வீடுகள் எரிந்து நாசம்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை 4 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிழக்கு பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெருவில் அடுத்தடுத்த கூரை... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மறியல்: பாஜகவினா் 48 போ் கைது

பெரம்பலூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 48 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். டாஸ்மாக் மதுபான கொள்முதலில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து... மேலும் பார்க்க