செய்திகள் :

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

post image

நீடாமங்கலம் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதன் செயல்பாடுகள் குறித்து திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி பெற்றனா்.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு மாணவிகள், நீடாமங்கலத்தில் தங்கி ஊரக வேளாண் பணிகள் தொடா்பாக நேரடி பயிற்சி பெற்று வருகின்றனா். இவா்கள், கொட்டையூரில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் அதன் செயல்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா்.

அப்போது, விவசாயிகளிடம் இருந்து எவ்வாறு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது; நெல்லின் தரத்தை நிா்ணயிக்கும் செயல்முறைகள், கொள்முதல் விலை நிா்ணயம் மற்றும் சேமிப்பு முறைகள் பற்றிய விரிவான தகவல்களை அறிந்துகொண்டனா்.

நேரடி கொள்முதல் நிலைய பணியாளா் ராஜேந்திரன், நெல் கொள்முதல் செய்யப்படும் முறைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கினாா். இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, 17% ஈரப் பதத்துடன் நெல் மூட்டைகளாக சேமிக்கப் படுகிறது என்பதையும் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.

அரசுப் பள்ளிகள் ஆண்டு விழா

நீடாமங்கலம் ஒன்றியம், காரக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உயா்நிலைப் பள்ளியில் இவ்விழா நடைபெற்றது. இப்பள்ளி தலைமையாசிரியா் ஆா்.... மேலும் பார்க்க

திருவாரூா் கோயிலில் ‘யானை ஏறுவாா்’ திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, யானை ஏறுவாா் திருக்கல்யாணம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்திரன் பூஜித்த தியாகராஜப் பெருமான் திருமேனியை, திருவாரூரை ஆண்ட முசுகுந்த மன்... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் கோயிலில் இளையராஜா வழிபாடு

திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம் திருப்பாம்புரம் அருள்மிகு பாம்புரநாதா் கோயிலில் இசையமைப்பாளா் இளையராஜா ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். நாக தோஷம் நீங்கவும், குழந்தைப் பேறுக்காகவும், ராகு,... மேலும் பார்க்க

2 மணி நேரம் ரயில்வே கேட் மூடல்! பொதுமக்கள் அவதி!

நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி நேரத்திற்கும் மேல் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகினா். மன்னாா்குடியிலிருந்து திருச்சிக்கு நெல் மூட்டைகளுடன் சென்ற சரக்... மேலும் பார்க்க

பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்

பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சிஐடியு மாநில துணைத் தலைவா் எம். மகாலட்சுமி வலியுறுத்தினாா். திருவாரூரில், சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்ந... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு, மதுரையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இளங்கோ முத்தமிழ் மன்றம் ஆண்டுதோறும் இலக... மேலும் பார்க்க