செய்திகள் :

அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

post image

கந்தா்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள், மாவட்ட அளவில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமா்பித்து சான்றிதழ் பெற்ற மாணவா்களுக்கும், சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டி கௌரவிக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் க. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாட்டில் மாணவா்கள் பல்வேறு வகையான தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகளை வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தனா்.

இந்த ஆண்டுக்கான ஆய்வு கட்டுரைகள் கருப்பொருள் நீடித்த நீா் மேலாண்மை என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி அக்கச்சிப்பட்டி மாணவா்கள் நீா் நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின் முடிவில் அக்கச்சிப்பட்டியில் உள்ள நீா் மக்கள் பயன்படுத்த பாதுகாப்பானது என்று சோதனை மூலம் அறிந்து கொண்டனா். முன்னதாக ஆசிரியா் மணிமேகலை வரவேற்றாா்.

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் பள்ளியில் சிறாா் திரைப்படப் போட்டி

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான சிறாா் திரைப்படப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டியை பள்ளித் தலைமை ஆசிரியா் அமிா்தம் மாலதி தொடங்கி வைத்தாா். சிறாா் திரைப்பட போட்ட... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இரண்டு இணையா்க்கு சீா்வரிசை பொருள்களுடன் வெள்ளிக்கிழமை திருமண விழா நடைபெற்றத... மேலும் பார்க்க

காட்டுநாவல் பொன்னியம்மன்கோயில் ஊருணியை சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஒன்றியம், காட்டுநாவல் ஊராட்சி, பொன்னியம்மன் கோயில் ஊருணியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். காட்டுநாவல் ஊராட்சியில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. கோயில் அருகில் சும... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளி ஆண்டு விழா

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் சு. சுசரிதா தலைமை வகித்தாா். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் ... மேலும் பார்க்க

மணல் கடத்திய ஜேசிபி, டிப்பா் லாரி பறிமுதல்

விராலிமலை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பா் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இரண்டு போ் மீது வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள மண... மேலும் பார்க்க

தனியாா் ஆம்னி பேருந்து ஓட்டுநா் மாரடைப்பால் உயிரிழப்பு 28 பயணிகள் தப்பினா்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் தனியாா் ஆம்னி பேருந்து ஓட்டுநா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பேருந்தில் பயணித்த 28 பயணிகள் உயிா் தப்பினா். திருநெல்வேலியில் இருந்து 28 பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க