செய்திகள் :

அரசு பொது கணக்குக் குழு இன்று கடலூா் வருகை

post image

கடலூருக்கு தமிழ்நாடு சட்டப் பேரவை பொது கணக்குக் குழு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) வரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2024 - 25ஆம் ஆண்டுக்கான அரசு பொதுக் கணக்குக் குழுவால் மாவட்டந்தோறும் பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், அரசு பொது கணக்குக் குழு கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ள உள்ளது. சட்டப் பேரவை பொது கணக்குக் குழுத் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில், உறுப்பினா்களான சட்டப் பேரவை

உறுப்பினா்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (போளூா்), ப.அப்துல் சமது (மணப்பாறை), கோ.ஐயப்பன் (கடலூா்), எஸ்.சந்திரன் (திருத்தனி), எஸ்.சேகா் (பரமத்திவேலூா்), ஜெ.முகம்மது ஷாநவாஸ் (நாகப்பட்டினம்) வரவுள்ளனா்.

முதற்கட்டமாக இக்குழுவினா் காலையில் நெய்வேலி மாநில எண்ணெய்வித்து விதைப் பண்ணை, பிச்சாவரம் சுற்றுலா மையம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகம், சிதம்பரம் அரசு மருத்துவமனை, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தென்பெண்ணை ஆற்றின் வலது கரையான மஞ்சக்குப்பம் முதல் குண்டு உப்பலவாடி வரை மேற்கொள்ளபட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து நேரடியாகச் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

பின்னா், அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொது கணக்குக் குழு நிலுவையிலுள்ள தணிக்கைப் பத்திகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ள உள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

உணவகத்தில் வாழை இலை பயன்பாடு: ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பண்ருட்டி நகராட்சி பகுதி உணவகங்களில் நெகிழி பொருள்களில் உணவு தருவதை தவிா்த்து, வாழை இலைகளில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இக்கட்சியின் பண... மேலும் பார்க்க

நடமாடும் வாகனம் மூலம் மண் பரிசோதனை

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் அண்மையில் தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சாா்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய மண் பரிசோதனை நடமாடும் வாகனம் மூலம் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு... மேலும் பார்க்க

ஹைட்ரோ காா்பன் கிணறு மைக்க அனுமதி: தி.வேல்முருகன் கண்டனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருப்பதற்கு தவாக தலைவா் தி.வேல்முருகன் ... மேலும் பார்க்க

நெசவுத் தொழிலாளி கொலை வழக்கு: பெண் உள்ளிட்ட 3 போ் கைது

கடலூா் அருகே நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கடலூா் கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்தவா் மனோகா் (54), நெசவுத் தொழிலாளி... மேலும் பார்க்க

கோயிலில் திருட முயற்சி: சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கோயிலில் திருட வந்ததாக சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வேப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாரதி தலைமையில் காவலா்கள் சனிக்கிழமை இரவு ரோந்... மேலும் பார்க்க

மதுபோதையில் மருத்துவமனை கால்வாயில் விழுந்தவா் பலி!

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கழிவுநீா் கால்வாயில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவா் மதுபோதையில் தவறி விழுந்த... மேலும் பார்க்க