செய்திகள் :

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

post image

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 25) தலைமைச் செயலகத்தில், சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ. 5.10  கோடி செலவில்  முழு அளவில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத்தளத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிறுவனமானது  திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்ப கல்வி நுணுக்கங்களையும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முன்னோடி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோள் பல்வேறு விதமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப்பாடங்களையும் மாணவர்களுக்குக் கற்றுத்தருவதாகும்.

இவ்வரசு பொறுப்பேற்றது  முதல் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக ரூ.1.58 கோடி செலவில் இப்பயிற்சி நிறுவனத்தின் கூட்ட அரங்கம், பழுதடைந்த கட்டடங்கள் மற்றும் மின்கலன்கள் போன்றவை சீரமைக்கப்பட்டுள்ளதோடு,  மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்கள் அமர்ந்து உணவு அருந்துவதற்காக ரூ.25 லட்சம் செலவில் உணவு அருந்தும் அறையும் அமைக்கப்பட்டது.

மேலும், இந்நிறுவனத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் பேரில் மாணவர் கல்வி நலன் கருதி பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களின் நலன் கருதி இறுதித் திட்ட குறும்படப் படப்பிடிப்பு தயாரிப்புச் செலவினம் ஒவ்வொரு குழுவிற்கும் ரூ. 1 லட்சம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நிறுவனத்தை மேலும் மேம்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கல்வி நலன்கருதியும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அந்த அறிவிப்பின்படி,  தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில்  ஒப்பனை அறைகள், அலங்கார உடை அறை, உணவு அருந்தும் அறை ஆகியவை இணைந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய சுமார் 17,517 சதுர அடி படப்பிடிப்புத்தளம், பழைய மாணவர் விடுதி, நீதிமன்றம், சிறைச்சாலை, படப்பிடிப்புத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளிர்சாதனக் கருவிகள், இரண்டு புதிய மின்மாற்றிகள் (11 kv HT 500 KVA- Transformers)  மற்றும்  இதர மின் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை ரூ. 5.10  கோடி செலவில்  முழு அளவில் புனரமைக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் இன்றைய நாள் திறந்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நெல்லை ஆணவக் கொலை: முதல்வரைச் சந்தித்த கவினின் தந்தை!

Chief Minister M.K. Stalin today (Aug. 25) inaugurated the fully renovated air-conditioned shooting set at the Tamil Nadu Government MGR Film and Television Training Institute premises in Taramani, Chennai, through video conferencing at the Secretariat. The set was built at a cost of Rs. 5.10 crore.

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

தவெக மாநாட்டில் ரேம்ப் வாக்கின்போது விஜய்யை சந்திக்கச் சென்ற இளைஞரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பான விடியோ குறித்து அந்த இளைஞர் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மா... மேலும் பார்க்க

நீங்கா நினைவில் வாழும் அண்ணன்... விஜயகாந்த் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து!

மறைந்த நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளுக்கு, தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நிலை: நலம் விசாரித்த விஜய்!

தலையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நலம் விசாரித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரம்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டத்தில், ஆம்புலன்ஸை தடுத்து அதில் இருந்த ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிமுக பொது... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்ததற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவ... மேலும் பார்க்க

5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் 5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், ஆகஸ்ட் 27, 28ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 48 மணி ந... மேலும் பார்க்க