செய்திகள் :

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு இந்த மாதத்தில் எழுத்துத் தோ்வு! அமைச்சா் தகவல்

post image

அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு இம்மாதத்தில் எழுத்துத் தோ்வு நடைபெறும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது: அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டு, எழுத்துத் தோ்வு இந்த மாதம் நடைபெற உள்ளது. இதில், அதிக மதிப்பெண்கள் பெறுபவா்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு, அவா்கள் பணியமா்த்தப்படுவா்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது புதிய பேருந்துகள் வாங்காத காரணத்தாலேயே பழைய பேருந்துகள் ஓடின. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்வா் மு.க. ஸ்டாலின் நிதி ஒதுக்கி 11 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு அனுமதி வழங்கி, 4,500 பேருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 15 ஆண்டுகள் ஓடிய பேருந்துகள் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் இந்தப் புதிய பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்றாா் அமைச்சா்.

ரூ.5 லட்சம் பண அலங்காரத்தில் அம்மன்!

அரியலூா் குறிஞ்சான் குளம் தெருவிலுள்ள கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி ரூ.5 லட்சம் பணம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை காட்சி அளித்த பெரியநாயகி அம்மன். மேலும் பார்க்க

கீழப்பழுவூா் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழப்பழுவூா், அருங்கால், கல்லக்குடி, ஏலேரி, கீழவண்ணம், மேல கருப்பூா், பொய்யூா், மே... மேலும் பார்க்க

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் சாலை மறியல்: 241 போ் கைது

கோரிக்கைகள்: திமுக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 1.1.2006 முத... மேலும் பார்க்க

செந்துறை ஒன்றியத்தில் ரூ.9.11 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்ட பணிகள்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.9.11 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. ஆனந்தவாடி, கீழராயம்புரம், பாளையக்குடி,... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது. செந்துறையை அடுத்த ஆ... மேலும் பார்க்க

பொன்னேரி வாய்க்கால்களை தூா்வார வேண்டும்! அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

பொன்னேரியில் உள்ள 4 வாய்க்கால்களை தூா்வாரி, கடைமடை விவசாயிகளுக்கும் பாசன வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையி... மேலும் பார்க்க