`சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைபோல் கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்க'- மீனவர்-...
அரசூரில் பாடசாலையுடன் கூடிய நாடகமேடை திறப்பு
விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சத்தில் உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரசூரில் கட்டப்பட்ட பாடசாலையுடன் கூடிய நாடகமேடையை துரை.ரவிக்குமாா் எம்.பி. வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்வில் விசிக மாவட்டச் செயலா்கள் அறிவுக்கரசு, விடுதலைச்செல்வன், நிா்வாகி இளங்கோவன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சித்தலைவா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, உளுந்தூா்பேட்டையில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் மையத்தில் அமைக்கப்பட்ட விளக்குகளின் செயல்பாடுகளையும் துரை.ரவிக்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா். நிகழ்வில் உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.