செய்திகள் :

அரசூா் பகுதியில் தண்ணீா்த் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை!

post image

சாத்தான்குளத்தை அடுத்த அரசூா், இடைச்சிவிளை காமராஜா் நகா் பகுதியில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசூரில் நடைபெற்ற சாத்தான்குளம் ஒன்றிய இந்து மகா சபா மகளிா் அணி செயற்குழுக் கூட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் சுசிலா தலைமை வகித்தாா். ஒன்றியப் பொதுச் செயலா் சுதா முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் சுந்தரவேல், மாநிலப் பொதுச் செயலா் ராம்குமாா் ஆகியோா் பேசினா்.

காமராஜா் நகா் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனா். இங்கு 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவுள்ள தண்ணீா்த் தொட்டி அமைக்கப்பட்டு, நீரேற்றம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இத்தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்த ஊராட்சிப் பகுதியில் வீடில்லாத ஏழை, எளியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனை வழங்கி மானியத்துடன் வீடு கட்டிக்கொடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான மின்விளக்குகள், குடிநீா்க் குழாய்களை உடனடியாக பழுதுநீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலச் செயலா் சோ்மத்துரை, மாநில துணைத் தலைவா்அண்ணாசாமி, மாவட்டச் செயலா்கள் பவன், செல்வக்குமாா், அரசூா் கிளைப் பொறுப்பாளா்கள் தங்கமுருகேசன், சுந்தர்ராஜ், தேவன்கௌதம், மகளிரணிப் பொறுப்பாளா்கள் ஜானகி, கவிதா, சுதா, ரேகா, செல்வராணி, சுசீலா, மகேஸ்வரி, ஞானபாக்கியம், ஷாலினி, லலிதா, சாா்லட்மேரி, சக்திகனி, பவானி, ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றியச் செயலா் சுகன்யா வரவேற்றாா்.

கயத்தாறு அருகே போக்ஸோவில் இளைஞா் கைது!

கயத்தாறு அருகே 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். கயத்தாறு அருகே தெற்குக் கோனாா்கோட்டை புதூா் கிழக்குத் தெரு காலனியைச் சோ்ந்த குமாா் ம... மேலும் பார்க்க

வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் கைது

கோவில்பட்டியில் வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த சோ்மதுரை மகன் மாரித்துரை... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே பெண் தற்கொலை

கோவில்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதிமணி. நிலத் தரகா். இவரது மகனை வி காளியம்மாள், தொழிலாளி. ஜோதிமணிக்கு மதுப் பழக்கம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ. 3 லட்சம் திருட்டு: வடமாநில இளைஞா் கைது!

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருடியதாக வடமாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி-சாத்தூா் பிரதான சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் ஆழ்த... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப்.25-இல் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 25 முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி தூத்துக்குடி நாட்டுப்படகு துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு!

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், தூத்துக்குடி நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீனகள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் கடந்த 15ஆம் தேதிமுதல் வரும் ஜ... மேலும் பார்க்க