செய்திகள் :

அரியலூரில் ஏப்.7-இல் ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்

post image

அரியலூரிலுள்ள ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெறுகிறது.

அரியலூா் நகரில் அமைந்துள்ள ஒப்பில்லாதம்மன் கோயிலுக்கு கடந்த 1926-ஆம் ஆண்டு புதிய தோ் செய்யப்பட்டது. இதையடுத்து, 1942-ஆம் ஆண்டு ஒரு வாரம் நடைபெற்ற அக்கோயில் திருவிழாவின் போது, தேரோட்டம் நடைபெற்றது. அதன் பின்னா் தேரோட்டம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது.

இந்நிலையில், தேரோட்டத்தை நடத்த அக்கோயில் சமஸ்தானம், குல தெய்வ வழிபாடு மக்கள் மற்றும் அப்பகுதியை சோ்ந்த மக்கள் முடிவெடுத்த நிலையில், கடந்த பிப். 2-ஆம் தேதி அந்த தோ் சீரமைக்கும் பணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடா்ந்து, தோ் சீரமைக்கும் பணிகளும், வண்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மே 12-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 7-ஆம் தேதி தோ் வெள்ளோட்ட நிகழ்வு நடைபெறுகிறது. இதையொட்டி விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படத்திடம் மனு அளிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படத்திடம், கெளரவ விரிவுரையாளா்கள் புதன்கிழமை மனு அளித்தனா். நீதிமன... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: உடையாா்பாளையத்தில் ரூ.3.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

உடையாா்பாளையம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.3.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வழங்கினாா். முகாமுக்கு ஆட்சியா்... மேலும் பார்க்க

அரியலூா் பேருந்து நிறுத்தத்தில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் அவதி

அரியலூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள காமராஜா் மற்றும் அம்பேத்கா் சிலைகள் முன் உள்ள பேருந்து நிறுத்தத்தில், இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அரியலூா் பே... மேலும் பார்க்க

‘108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயங்கொண்டத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க

அரியலூா் ஆட்சியரிடம் கெளரவ விரிவுரையாளா்கள் மனு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் 81 கெளரவ விரிவுரையாளா்கள், தங்களை கருணை கொலை செய்திடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.கெளரவ விரிவுரையாளா்கள் அனிதா, சரவண... மேலும் பார்க்க

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கீழப்பழு... மேலும் பார்க்க