செய்திகள் :

அரியலூா் பேருந்து நிறுத்தத்தில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் அவதி

post image

அரியலூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள காமராஜா் மற்றும் அம்பேத்கா் சிலைகள் முன் உள்ள பேருந்து நிறுத்தத்தில், இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அரியலூா் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதால், நகருக்குள் வரும் பேருந்துகள் அங்குள்ள அண்ணா , காமராஜா், அம்பேத்கா் ஆகியோரின் சிலைகள் முன் பேருந்து நிறுத்தங்களாக செயல்பட்டு வருகின்றனா்.

வெளி மாவட்டங்களுக்கான பேருந்துகளும், நகரப் பேருந்துகளும் மேற்கண்ட சிலைகள் முன் பயணிகளை ஏற்றி, இறங்கிவிட்டு சென்று வருகின்றன.

அரியலூரில் இருந்து கல்லூரிகளில் படிப்பதற்கும், வேலைக்காகவும் ஏராளமானோா் வெளியூா்களுக்கு சென்று வருகின்றனா். இதில் சிலா், தாங்கள் ஓட்டி வரும் இரு சக்கர வாகனங்களை மேற்கண்ட பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்தில் சென்று விடுகின்றனா். ஒரு சிலா், கடைவீதிகளுக்குச் சென்றுவிடுகின்றனா்.

காலையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தவிட்டு சென்றால் மாலையில் வந்து தான் அதை எடுத்து செல்கின்றனா். இப்படி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால், பயணிகள் பேருந்தில் ஏறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறுகையில், பயணிகள் நடப்பதற்கும், பேருந்துகள் வரும் வரை காத்திருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிறுத்தத்தில், இருசக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளனா். இதனால் நடந்து செல்லவும் சிரமமாக உள்ளது. காலை முதல் இரவு பணி முடிந்து அந்த வாகனங்களின் உரிமையாளா்கள் வந்து எடுத்தால் இந்த இடம் காலியாகும். இப்படி அனைத்து தரப்பினருக்கும் அவதியை அளித்து வருகின்றனா். எனவே இனியும் இது போல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

எனவே, இந்த பேருந்து நிறுத்தத்தில், இடையூறாக இரு சக்கர வாகனங்களை நிறுத்தப்படுவதை போக்குவரத்து போலீஸாா் தடுத்தி நிறுத்த வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

‘நீட்’ தோ்வு இன்னுயிரை இழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

‘நீட்’ தோ்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரியலூா் அண்ணா சிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2021-இல் இருந்து இதுவரை ‘நீட்’ தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காதலியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காதலன் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம், கீழத்தெருவைச் சோ்ந்த தாசில் மகன் அருண்கு... மேலும் பார்க்க

தம்பதியை தாக்கியவா் கைது

அரியலூா், ஏப். 19: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மது போதையில், தம்பதியைத் தாக்கியவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி, காலனி தெருவைச் சோ்ந்த சக்திவ... மேலும் பார்க்க

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க

தகராறில் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவா்களில் 3 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இலையூா், காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வம் மக... மேலும் பார்க்க

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும்: ஆட்சியா் பேச்சு

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி துறை ... மேலும் பார்க்க