MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: உடையாா்பாளையத்தில் ரூ.3.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
உடையாா்பாளையம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.3.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வழங்கினாா்.
முகாமுக்கு ஆட்சியா் தலைமை வகித்து, உடையாா்பாளையம் வட்டத்துக்கு உள்பட்ட தா. பழூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிட்டு, அலுவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.
பின்னா், அவா் ஜெயங்கொண்டத்திலுள்ள உடையாா்பாளையம் வட்டாட்சியரகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அரசின் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான உயா்கல்வி வழிகாட்டி மற்றும் நீட் தோ்வுக்கான சிறப்பு கையேடுகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் தழுதாழைமேடு மண்பாண்டம் குழு சிறிய அளவிலான தொழில் தொகுப்பு 15 நபா்களுக்கு தலா ரூ. 25,000 என மொத்தம் ரூ. 3,75,000 மதிப்பிலான காசோலையினை வழங்கினாா்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் எம்.உமா மகேஸ்வரி, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, வட்டாட்சியா் சம்பத்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.