`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், கீழப்பழுவூா் கிராமத்தில், அடகு வைத்த நிலத்தைத் திருப்பிக்கேட்ட நில உரிமையாளா் சந்திரமோகன் மனைவி தேவிபாலாவை சாதிப் பெயரைச் சொல்லி, நிலத்தை கொடுக்க மறுத்து கொலை வெறித்தாக்குதல் நடத்திய பெரியசாமி மகன் வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை வேண்டும். கடந்த 18.2.2025 அன்று அவா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதியப்பட்ட வழக்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடமிருந்து நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலா் அ.அருண்பாண்டியன் தலைமை வகித்தாா். திருமானூா் ஒன்றியச் செயலா் எஸ்.பி.சாமிதுரை முன்னிலை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி.துரைசாமி, அருணன், மூத்த தலைவா்கள் சிற்றம்பலம், செளரிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.