செய்திகள் :

அரியலூரில் சட்டவிரோதமாக மது விற்றதாக 267 வழக்குகள் பதிவு

post image

அரியலூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக 267 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை மாவட்ட காவல் துறை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினா், நிகழாண்டு 2025 தொடக்கம் முதல் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்துக்காக 267 வழக்குகள் பதியப்பட்டு, 7,962 பாட்டில்கள்(1432.710 லிட்டா்) மற்றும் 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கஞ்சா விற்பனை செய்த குற்றத்துக்கு 26 வழக்குகள் பதியப்பட்டு, 5.3 கிலோ கஞ்சா மற்றும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவா்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

சட்டவிரோதமாக கள் இறக்குதல் மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநில மதுபானத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்த குற்றத்திற்காக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரிடமிருந்து 30 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம் அரியலூா் ஆட்சியா் அழைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஆக.15 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த கோரிக்கை

அரசு மருத்துவா்களின் ஒரு ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இந்த மனுவை, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க

செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா். செந்துறை அடுத்த இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணம... மேலும் பார்க்க

நடமாடும் மது விற்பனை, மணல் கொள்ளையை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த தூத்தூா் கிராமத்தில், நடமாடும் மது விற்பனை மற்றும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்தூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின... மேலும் பார்க்க

இணைப்புச் சாலை இல்லாததால் வெள்ளாற்று மேம்பாலம் வீண்! மழையால் தரைப்பாலம் துண்டிப்பு; 50 கிராம மக்கள் தவிப்பு

அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைப்பதற்காக வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட பாலத்துக்கான இணைப்புச் சாலை அமைக்கப்படாததால் இரு மாவட்ட கிராமத்தினா் தவித்து வருகின்றனா். அ... மேலும் பார்க்க