அரியலூரில் பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!
அரியலூரில் வீட்டினுள் பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
அரியலூா் அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் பாப்பா (44) என்பவா் வசித்து வந்தாா். வியாழக்கிழமை காலையில், பழைய துணிகளை வாங்க வந்த பெண் ஒருவா், பாப்பா வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, வீட்டின் கதவு திறந்த நிலையில், பாப்பா உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அந்தப் பெண், அக்கம்பக்கத்தில் உள்ளவா்களிடம் கூறினாா்.
தகவலின்பேரில், அரியலூா் நகர காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுபபி வைத்து, 2 தினங்களுக்கு முன்பு பாப்பா இறந்திருக்கலாம் என தெரிவித்தனா்.
மேலும், பாப்பாவின் குடும்ப உறுப்பினா்கள் யாா், அவா்கள் எங்கு உள்ளனா் எனவும், பாப்பா எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்தும் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.