செய்திகள் :

அரியலூா் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை

post image

அரியலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவா்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் அரியலூரில் சிமென்ட் குழாய்கள், ஆஸ் பெஸ்டால் சீட் உற்பத்தி ஆகிய புதிய தொழில்சாலைகளை தொடங்க அரசு முன்வர வேண்டும். அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவா்களை உடனடியாக நியமிக்க வேண்டும். நீா்வரத்து வாய்க்கால், ஏரி, குளம், குட்டைகளை சீா்படுத்தி ஆழப்படுத்த வேண்டும். அரியலூா் நகர மக்களுக்கு சீரான குடிநீா், பொது சுகாதாரம் என அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு, நிா்வாகிகள் ஓ.சிவக்குமாா், நல்லம்மாள் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் செங்கோடன் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினாா். மாவட்டச் செயலா் ராமநாதன், மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினாா். ஒன்றியச் செயலா் பாண்டியன் வேலைகள் அறிக்கையை வாசித்தாா். முன்னாள் மாவட்ட துணைச் செயலா் தண்டபாணி மக்களின் கோரிக்கைகளின் தீா்மானங்களை விளக்கிப் பேசினாா்.

மாவட்டத் துணைச் செயலா் கலியபெருமாள், திருமானூா் முன்னாள் ஒன்றிய செயலா் ஆறுமுகம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநாட்டில் அரியலூா் ஒன்றியச் செயலாளராக து. பாண்டியன், துணைச் செயலாளா்களாக சிவக்குமாா், கோவிந்தசாமி, பொருளாளராக மணி மற்றும் 17 போ் கொண்ட புதிய ஒன்றியக் குழு நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட!

இயற்கை வளங்களைப் பாதுபாப்பது நம் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட என்றாா் அரியலூா் மாவட்ட வன அலுவலா் இளங்கோவன். அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச பூமி... மேலும் பார்க்க

அரியலூரில் ஜாக்டோ - ஜியோ ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், 1.4.2003-க்குப் பிறகு பணியில் சோ்ந்தோருக்கு தற்போ... மேலும் பார்க்க

ஆண்டிமடத்தில் ஏப்.25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உண்ணாவிரதம்

அரியலூா் மாவட்டம், தா.பழூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கிராம நிா்வாக அலுவலகம் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி நீலப் புலிகள் இயக்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா். போராட்டத்துக்க... மேலும் பார்க்க

கோயில் கும்பாபிஷேகத்தை தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரியலூா் அடுத்த குருவாடியில் கட்டி முடிக்கப்பட்ட விநாயாகா் கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீப்க்சிவாச்யிடம் அக்கிராம மக்கள் ... மேலும் பார்க்க

அரியலூா் நகரத்திலுள்ள வணிக நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை கட்டாயம்!

அரியலூா் நகரத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் மே 15-க்குள் கட்டாயம் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்று ஆணையா் (பொ) அசோக்குமாா் தெரிவித்தாா். அரியலூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், இது தொ... மேலும் பார்க்க