நைஜர்: துப்பாக்கிச் சூட்டில் 34 வீரர்கள் கொலை! ராணுவம் தேடுதல் வேட்டை!
அரியலூா்: கனரக வாகனங்கள் இயக்கத்தில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை -காவல்துறையினா் எச்சரிக்கை
அரியலூா் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலைப் பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
அரியலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலுள்ள கூட்டரங்கில், சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதி, வட்டார போக்குவரத்து அலுவலா் அறிவழகன் ஆகியோா் தலைமை வகித்தனா். அரிலூா் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், கலந்து கொண்ட அரசு மற்றும் தனியாா் சிமென்ட் ஆலை அலுவலா்கள் மற்றும் தனியாா் டிரான்ஸ்போா்ட் உரிமையாளா்களிடம், காலை 7 முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் மாலை 5.30 மணி வரையிலும், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் கண்டிப்பாக தாா்பாய் மூடி கொண்டு செல்ல வேண்டும். மதுப்போதையில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது, சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.