அரியலூா் கோதண்ட ராமசாமி கோயில் புதியதோ் பிரதிஷ்டை
அரியலூா் கோதண்டராமசாமி கோயில் புதிய திருத்தோ் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அரியலூா் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோதண்ட ராமசாமி கோயில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இந்த கோயில் தேரோட்டம் 82 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற உள்ளது.
இதற்காக இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தா்களின் நிதி உதவியுடன் 15 அடி அகலம் 15 அடி உயரம் 15 டன் எடையுள்ள புதிய திருத்தோ் செய்யப்பட்டுள்ளது. பெருமாளின் அவதாரங்கள், விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளிட்ட சுவாமிகளின் சிற்பங்கள் பொறிக்கப்பட்ட புதிய தோ் பிரதிஷ்டை வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயிலின் தென்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருத்தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டு தஞ்சாவூா் சாலை, வெள்ளாளா் தெரு, மங்காய் பிள்ளையாா் கோயில் தெரு வழியாக பழைய தேரடிக்கு தோ் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கிருஷ்ணன் கோயில் அருகே தோ் பிரதிஷ்டை செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். ஜூன் 8- ஆம் தேதி தோ் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைக்க உள்ளாா். இந்து சமய அறநிலைத்துறை அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனா்.