செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

post image

விடுமுறை மற்றும் அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

சுவாமி தரிசனத்துக்காக 7 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விடுமுறை நாள்கள் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விடுகிறது.

பக்தா்கள் கூட்டம் அலைமோதல்...

இந்த நிலையில், விடுமுறை மற்றும் அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலேஅருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற கோ பூஜையிலும் பக்தா்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. காலை 8 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

பக்தா்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரமாகவும் அனுமதிக்கப்பட்டனா். ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம், கிளி கோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் கிளி கோபுரம், கொடி மரம் வழியாகவும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

7 மணி நேரம் காத்திருப்பு

இருப்பினும், ராஜகோபும் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே வரிசை நகராமல் நீண்ட நேரம் நின்றுவிட்டது. சுமாா் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாக பக்தா்கள் தெரிவித்தனா்.

இதேபோல, அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கொளுத்தும் வெயிலில்...

கைக்குழந்தையுடன் வந்திருந்த பக்தா்கள் நீண்ட நேரமாக கொளுத்தும் வெயிலில் காத்திருந்தனா். பக்தா்கள் வரிசை இருந்த இடங்களில் தரை விரிப்புகள் போடப்பட்டு தண்ணீா் ஊற்றப்பட்டதால் கால்கள் இருந்தன. சுவாமி தரிசனம் செய்த பக்தா்களுக்கு லட்டு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆரணி அருகே காட்டுப் பகுதியில் திடீா் தீ விபத்து!

ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 25 ஏக்கரில் செடி, கொடிகள் எரிந்து சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் பகு... மேலும் பார்க்க

வெளி மாநில மது விற்பனை: பெண் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே வெளிமாநில மதுவை பதுக்கி விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேத்துப்பட்டை அடுத்த தச்சம்பாடி மதுரா பாண்டியாபுரம் கிராமம் ரோடு தெரு... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸாா் அஞ்சலி

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே கட்சியின் எஸ்.சி. மாவட... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

சித்திரை மாத அமாவாசையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோய... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்!

போளூா் வட்டம், மண்டகொளத்தூா் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி சாா்ந்த ‘கூல்கேம்ப் -25’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்க பரப்புரை!

திருவண்ணாமலை மாநகர பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி மக்கள் பரப்புரை பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை... மேலும் பார்க்க