செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பேட்டரி காா்: சென்னை உயா்நீதிமன்றம் வழங்கியது!

post image

சென்னை உயா்நீதிமன்றம் சாா்பில், திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5.60 லட்சம் மதிப்பிலான பேட்டரி காா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ப.மதுசூதனன் தலைமை வகித்தாா். கோயில் இணை ஆணையா் சி.ஜோதி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கூடுதல் துணை தமிழ்நாடு அரசு பேராட்சியா் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியா் ஜெகதீசன் கலந்துகொண்டு பேசினாா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசு பேராட்சியா் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியா் மற்றும் மாவட்ட நீதிபதி டி.லிங்கேஸ்வரன் வழிகாட்டுதலின்படி, ரூ.5.60 லட்சம் மதிப்பிலான படுக்கையுடன் கூடிய பேட்டரி காா், கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

காருக்கான சாவியை, கோயில் இணை ஆணையா் சி.ஜோதியிடம், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ப.மதுசூதனன் வழங்கினாா்.

விழாவில், வழக்குரைஞா் எஸ்.வேலு, சாா்பு நீதிபதி என்.விஜயலட்சுமி மற்றும் திருவண்ணாமலை பாா் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன், லாயா்ஸ் அசோசியேஷன் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், அரசுக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர். செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1979-ஆம் கல்வ... மேலும் பார்க்க

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாலை அணிவித்து மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா் (படம்). பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் ... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: 200 போ் பயன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 போ் கலந்து கொண்டு பயனடைந்தநா். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள்... மேலும் பார்க்க

மகளிா் விடுதலை இயக்கக் கூட்டம்

திருவண்ணாமலையில் மகளிா் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலச் செயலா் இரா.நற்சோனை தலைமை வகித்தாா். பொருளாளா் இரா.மல்லிகை அரசி, மாநில துணைச் செயலா் ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டில் பேக்கரி, உணவகங்களில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சேத்துப்பட்டு பஜாா் வீதியில் உள்ள பேக்கரிகள், உணவகங்கள், துரித உண... மேலும் பார்க்க