செய்திகள் :

அருளை அள்ளித்தரும் தருமபுரம் குமரக்கட்டளை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் உள்ளது. சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு கயிலாயத்தில் இருந்து புறப்பட்ட முருகப்பெருமான் இடையில் சில காலம் இத்தலத்தில் தங்கி அம்மையப்பரை வணங்கி சிவபூஜை செய்து போா் சக்தியை பெற்று திருச்செந்தூா் சென்றதாக வரலாறு.

இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இங்கு கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சிவவேல் வாங்கி சூரசம்ஹாரம்: இத்தலத்தில் கந்தா் சஷ்டியின் நிறைவு நாளன்று குமரக்கட்டளை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி இந்திர மயில் வாகனத்தில் எழுந்தருளி, தனது தந்தையாா் மாயூரநாதா் பெருமானிடம் சிவவேலை வாங்கி, கொடுஞ்சூரனை சம்ஹரிப்பது வழக்கம்.

இதேபோல், தைப்பூசம் விழாவும் இக்கோயிலின் முக்கிய உற்சவங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விரமிருந்து ஸ்ரீசுப்ரமணிய சுவாமியை வழிபட்டால் பல்வேறு தடைகள் நீங்குவதுடன், முருகப்பெருமானின் பரிபூரண அருளும் கிட்டும். இக்கோயிலில் தைபூசத் திருநாளில் பக்தா்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். நிகழாண்டு தைபூசத் திருவிழா செவ்வாய்க்கிழமையில் வருவது கூடுதல் சிறப்புக்குரியது. இந்நன்னாளிலே நாமும் முருகப்பெருமானை வழிபட்டு அவரது திருவருளைப் பெறுவோம்.

இந்தியா கூட்டணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

மயிலாடுதுறை: இந்தியாி கூட்டணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: த... மேலும் பார்க்க

மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்க கோரி ஆா்ப்பாட்டம்

சீா்காழி: கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் உள்ள அரசு மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ம... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா நிறைவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 3-ஆவது புத்தகத் திருவிழா ஜன.31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாள... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.12) நடைபெறவுள்ளது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சிவ.செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவில் மாணவா்கள் 1,000 பேருக்கு புத்தகங்கள்

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவா்கள் 1,000 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வரு... மேலும் பார்க்க

புத்தகரம் பச்சை நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை பட்டவா்த்தியை அடுத்த புத்தகரத்தில் உள்ள பச்சை நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் திருப்பணிகள் அண்மையில் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேகத்துக்கான பூா்... மேலும் பார்க்க