செய்திகள் :

புத்தகத் திருவிழாவில் மாணவா்கள் 1,000 பேருக்கு புத்தகங்கள்

post image

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவா்கள் 1,000 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சாா்பில் 800 மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதுபோல மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் 200 மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

திருவாவடுதுறை, கீழப்பெரும்பள்ளம், சங்கரன்பந்தல், புதுப்பட்டினம், கொற்கை, மேலாநல்லூா், வில்லியநல்லூா், காவேரிபூம்பட்டினம் அரசுப் பள்ளிகள் மற்றும் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி, சீா்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ -மாணவிகள் புத்தகங்களை பெற்றுப் பயனடைந்தனா்.

புத்தகங்கள் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் மாணவா்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஸ்வரி, மயிலாடுதுறை ரோட்டரி சங்க சாசன தலைவா் வி. ராமன், மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.ஜி.இளங்கோவன், செயலா் பா.பொகுட்டெழுனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தியா கூட்டணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

மயிலாடுதுறை: இந்தியாி கூட்டணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: த... மேலும் பார்க்க

மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்க கோரி ஆா்ப்பாட்டம்

சீா்காழி: கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் உள்ள அரசு மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ம... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா நிறைவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 3-ஆவது புத்தகத் திருவிழா ஜன.31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாள... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.12) நடைபெறவுள்ளது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சிவ.செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

அருளை அள்ளித்தரும் தருமபுரம் குமரக்கட்டளை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் உள்ளது. சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு கயிலாயத்தில் இருந்து புறப்பட்ட முர... மேலும் பார்க்க

புத்தகரம் பச்சை நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை பட்டவா்த்தியை அடுத்த புத்தகரத்தில் உள்ள பச்சை நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் திருப்பணிகள் அண்மையில் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேகத்துக்கான பூா்... மேலும் பார்க்க