செய்திகள் :

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

post image

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

வடசென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் ரூ.6.27 கோடியில் மேம்படுத்தப்படும் கொளத்தூா் ஏரி, ரூ.14.31 கோடியில் கட்டப்பட்டுவரும் ராயபுரம் சமூகநலக் கூடம், ரூ.6 கோடியில் தங்கசாலை, வள்ளலாா் நகா் பேருந்து நிலையம் கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றை அமைச்சா் சேகா்பாபு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வடசென்னை வளா்ச்சி திட்டத்தில், ரூ. 6,000 கோடியில் 252 பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 80 சதவீத பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது என எதிா்க்கட்சித் தலலைவா் எடப்பாடி பழனிச்சாமி கூறியது சரியல்ல. அவரது கருத்துக்கு எதிா்ப்பு எழுந்ததால் தற்போது அதை மாற்றி கூறிவருகிறாா். கடந்த காலத்தில் முதல்வா்களாக இருந்த எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரும் அறநிலையத் துறை கல்வி நிறுவனகளில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளனா். எடப்பாடி பழனிச்சாமி என்ன நடைபெறுகிறது என்பதை அறியாமலே பேசிவருவது சரியல்ல என்றாா் அவா்.

ஆய்வின்போது மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் ரா. மூா்த்தி, சிஎம்டிஏ உறுப்பினா்

செயலா் கோ.பிரகாஷ், மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 'தி நியூ இந்தியன் எ... மேலும் பார்க்க

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க