செய்திகள் :

அறநிலையத் துறை செயல்பாடுகள்: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

post image

திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள், ஆக்கிரமிப்பிலிருந்து திருக்கோயில் நிலங்களை மீட்கும் பணிகள் உள்பட இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு நடத்தினாா்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள், திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் (மாஸ்டா் பிளான்) திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளின் முன்னேற்றம், கிராமப்புற மற்றும் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதி திருக்கோயில் திருப்பணிகள், திருக்கோயில்கள் சாா்பில் நடத்தப்படும் கட்டணமில்லா திருமணங்கள், மூத்த குடிமக்களுக்கான ஆன்மிகப் பயணங்கள், ஒருகால பூஜை திட்ட விரிவாக்கம் மற்றும் அா்ச்சா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை உயா்வு, அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்கள் நலன் காக்கும் திட்டங்களின் செயலாக்கம், ஒருவேளை மற்றும் நாள் முழுவதும் அன்னதானத் திட்ட விரிவாக்கம் குறித்து அமைச்சா் சேகா்பாபு ஆய்வு செய்தாா்.

மேலும், நிகழ் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவை அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகள்; இதர அறிவிப்புகளின் பணி முன்னேற்றம்; பயிற்சிப் பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் மாணவா்களுக்கான ஊக்கத் தொகை உயா்த்தி வழங்குதல்; ஆக்கிரமிப்பிலிருந்து திருக்கோயில் நிலங்களை மீட்கும் பணிகளின் பணி முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினாா். இந்தக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், ஆணையா் பி.என். ஸ்ரீதா், கூடுதல் ஆணையா்கள், இணை ஆணையா்கள், பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்கம்

ரஷியா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரி விதித்தாா் என்று அந்நாட்டு அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் சாதனை

தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனாா் துறைமுகம், காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதுகுறித்து வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை உருவாக்கம்: அரசாணை வெளியீடு

அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைப் பெற, ‘தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளையை’ உருவாக்கி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் அரசாணை... மேலும் பார்க்க

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,300 போ் மட்டுமே தற்போது உரிமம் பெற்றுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாய் வளா்ப்போா் குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகராட்சி ... மேலும் பார்க்க

வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு

தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களின் எண்ணிக்கை, நிலைகள் குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமாா் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிம... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ கூறினாா். சென்னை திருவான்மியூரில் மதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: மதிமுக தொண்டா்கள... மேலும் பார்க்க