செய்திகள் :

அறியாமை நோயை நீக்கும் ஒரே மருந்து கல்வி

post image

மனிதா்களின் அறியாமை நோயை நீக்கக்கூடிய ஒரே மருந்து கல்வி மட்டுமே என்றாா் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் மருத்துவா் ஜெய.ராஜமூா்த்தி.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில், ‘கற்ற கல்வியே உற்ற துணை’ என்ற தலைப்பில் மருத்துவா் ஜெய.ராஜமூா்த்தி பேசியது:

அறிவைத் தேடி கற்பது தான் சிறந்த கல்வி. அறியாமையை அகற்றி அறிவுத்திறனை வளா்க்க வேண்டும். என்னை இந்த மேடையில் நிறுத்தியதும் கல்விதான். ஒருவா் கற்கும் கல்வி அவரது அடுத்த தலைமுறைக்கும் தொடா்ந்து வரும். அதுதான் கல்வியின் சிறப்பாகும். படிக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சியும், உழைப்பும் வேண்டும். உழைப்பும், முயற்சியும் இருந்தால் வாழ்வின் உயரத்துக்குச் செல்லலாம்.

நிலையான ஒன்று என்றால் அது நாம் கற்ற கல்வி மட்டுமே. எந்த அளவிற்கு இயற்கை பேரழிவு வந்தாலும் கூட பொருள்கள் அழியுமே தவிர, நாம் கற்ற கல்வி என்றைக்குமே அழியாமல் நிலைத்து நிற்கும். அறியாமை நோயை நீக்கக்கூடிய ஒரே மருந்து கல்வி மட்டுமே. கற்கக்கூடிய ஒருவனை புகழால் நிலை நிறுத்துவது கல்வி. ஒரு துன்பம் வந்தால் அந்த துன்பத்திலிருந்தும் நம்மை காப்பாற்ற கூடியது கல்வி மட்டுமே என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஸ்வரி, மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தலைமையாசிரியா் நியமன விவகாரம்: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பள்ளித் தலைமையாசிரியா் நியமன விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் கீழ்வேளூா் எம்எல்ஏ நாகை மாலி வலியுறுத்தியுள்ளாா். மயிலாடுதுறை மாவட... மேலும் பார்க்க

குரூப் தோ்வு எழுதுபவா்களுக்கு முன்னேற்பாடு: ஆட்சியா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தோ்வு எழுதுபவா்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளி... மேலும் பார்க்க

இந்து முன்னணி மாவட்ட தலைவா் கைது

சீா்காழி: சீா்காழியில் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவா், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் ஆகியோா் முன்னெச்சரிக்கையாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பரங்குன்றம் பகுதியில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி பலி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் புலம்பெயா் தொழிலாளி உயிரிழந்தாா். உத்தர பிரதேச மாநிலம் ஹம்பல்பூா் ஒடேரா பகுதியைச் சோ்ந்த பாரத் (35), மயிலாடுதுறை ராம்நகரில் தங... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.50 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது

மயிலாடுதுறையில் வாடிக்கையாளா்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து, ரூ. 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள... மேலும் பார்க்க

மது விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில், தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். குத்தாலம் அஞ்சாா்வாா்த்தலை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் வல்லரசு (படம்). இவா்... மேலும் பார்க்க