செய்திகள் :

அழுகிய நிலையில் முன்னாள் டிஎஸ்பி உடல் மீட்பு

post image

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த முன்னாள் காவல் துணைக்காணிப்பாளா் உடலை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஊமச்சிகுளம்-அலங்காநல்லூா் சாலையில் உள்ள அன்னை பாரத் குடியிருப்பில் வசித்தவா் துரைசிங்கம் (65). இவா் மதுரை மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இவா் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பூட்டப்பட்டிருந்த இவரது வீட்டினுள் இருந்து செவ்வாய்க்கிழமை காலை துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்தப் பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

ஊமச்சிகுளம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டின் படுக்கையறையில் அழுகிய நிலையில் கிடந்த முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளா் துரைசிங்கத்தின் உடலை மீட்டனா். அவரது உடல் கூறாய்வுக்கா மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. துரைசிங்கம் எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் திமுக கூட்டணி!திருச்சி சிவா எம்.பி.

திமுக கூட்டணியானது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக் கூடியது என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என். சிவா தெரிவித்தாா். விருதுநகரில் திமுக இளைஞரணி சாா்பில்... மேலும் பார்க்க

திமுகவால் ஏற்படும் பிரச்னைகளை அதிமுகவினா் பொதுமக்களிடம் விளக்க வேண்டும்! - முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

திமுக அரசால் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் பணிக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமை... மேலும் பார்க்க

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க