கரூர் கூட்ட நெரிசல் பலி: உச்ச நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நயினார் நாகேந்...
அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்
கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் நெடிய வலி தருவதாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
``இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை...’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியோனரது குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, ஆறுதல் கூறினார்.
இதையும் படிக்க:கரூர் கூட்ட நெரிசல் பலி: 39 பேரில் 22 பேரின் உடல்கள் ஒப்படைப்பு