செய்திகள் :

`அவர்கள் இனி எங்கள் ரைவல்ரி இல்லை' - India - Pakistan குறித்து சூர்யகுமார் யாதவ்

post image

கடந்த (சனிக்கிழமை, செப் 21) துபாயில் நடைபெற்ற ஆசியா கோப்பை 2025 தொடரின் சூப்பர் 4 போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தானை கடுமையாக இகழும்படி பதிலளித்துள்ளார் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

India vs Pakistan
India vs Pakistan

பாகிஸ்தானின் செயல்திறன் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான வரலாற்றுப் பூர்வமான போட்டி மனப்பான்மை (Rivalry (ரைவல்ரி)) பற்றி கேட்கப்பட்டபோது, "இந்த கேள்வி குறித்து நான் பேச விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் India - Pakistan ரைவல்ரி குறித்து கேட்பதை நிறுத்த வேண்டும்" என்றார் சூர்யகுமார் யாதவ்.

மேலும், "என்னைப்பொறுத்தவரை இரண்டு அணிகள் 15-20 போட்டிகள் விளையாடுகின்றனர். வெற்றி விகிதம் 7-7 அல்லது 7-8 என இருந்தால் அது நல்ல கிரிக்கெட், அதை ரைவல்ரி என அழைக்கலாம். ஆனால் 13-0, 10-1 என இருக்கும்போது, இது இனி ரைவல்ரி இல்லை. நாங்கள் அவர்களை விட சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினோம், நன்றாக பந்துவீசினோம்" என்றார்.

Team India
Team India

ஆசிய கோப்பை 2025ல் 8 நாட்களில் இரண்டு முறை பாகிஸ்தானை வெற்றி பெற்றுள்ளது இந்தியா. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 31 போட்டிகளில் 23 வெற்றிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது இந்தியா.

எனினும் ரைவல்ரியின் தன்மையை 15 ஆண்டுகளை வைத்து முடிவுசெய்யக் கூடாது என்கின்றனர் பாகிஸ்தான் ரசிகர்கள். இரு நாடுகள் இடையிலான இதுவரையிலான ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் 88 போட்டிகளை வென்றுள்ளதாகவும், இந்தியா 75 வெற்றிகளை மட்டுமே பெற்றிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் ரைவல்ரி குறித்த உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்!

Ind vs Ban: "இந்தியாவை வீழ்த்தும் திறன் எல்லா அணிகளுக்கும் இருக்கிறது"- வங்காளதேச பயிற்சியாளர் பளீச்

இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 வடிவில் நடைபெற்று வருகிறது.ஏ, பி என இரண்டு குழுக்களாக 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இரு குழுக்களில் முதல்... மேலும் பார்க்க

இந்தியா 'ஏ' கேப்டன் பதவியிலிருந்தும், தொடரில் இருந்தும் விலகிய ஸ்ரேயஸ் ஐயர்; வெளியான தகவல் என்ன?

2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம்பெறாத ஸ்ரேயஸ் ஐயர், ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். முதல் போட்டி 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் ஆஸ... மேலும் பார்க்க

Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன் கான்வே ஓபன்

இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வதேசப் போட்டிக்கு முழுக்கு போட்டு 6 வருடங்கள் ஆனாலும், ஐ.பி.எல்லில் இன்னமும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார... மேலும் பார்க்க

Ind Vs Pak: இந்தியாவுக்கெதிரான போட்டியில் சர்ச்சையான AK 47 செலிப்ரேஷன்; பாக்., வீரர் விளக்கம் என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.இப்போட்டியில் பாகிஸ்தான் அணியினர், லீக் சுற்றில் இந்தியாவிடம் மோசமா... மேலும் பார்க்க

Ind vs Pak: போராடித் தோற்ற பாகிஸ்தான்; மீண்டும் கைகுலுக்காமல் சென்ற இந்திய வீரர்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை தொடரில், சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 21) மோதின.ஏற்கெனவே செப்டம்பர் 14-ம் தேதி லீக் சுற்றில் இரு அணிகளும் மோதியபோது... மேலும் பார்க்க

Mithun Manhas: BCCI-யின் புதிய தலைவர் இவரா? நாமினேஷன் செய்த முன்னாள் CSK வீரர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி கடந்த ஜூலையில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் தாமாக முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக,... மேலும் பார்க்க