அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம்
பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை முதல் கரூா் வரையில் விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை பெட்ரோ நெட் என்கிற நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. அதே பகுதியில் ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்துவதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில் பழைய அனுமதியை வைத்துக் கொண்டு காவல் துறை பாதுகாப்போடு திட்டப் பணியை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. எனவே சாலையோரமாக எண்ணெய் குழாயை பதிக்கக் கோரி பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில் 7-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 9 விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.