செய்திகள் :

ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அமலாக்க கட்டண விகிதங்களில் திருத்தம்: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

post image

பொது வீதிகள் மற்றும் இடங்களுக்கு இடையூறாக இருக்கும் பொருள்கள் மற்றும் வாகனங்களுக்கான கூட்டுக் கட்டணம், அகற்றுதல் கட்டணங்கள் மற்றும் சேமிப்பு கட்டணங்களுக்கான அமலாக்க கட்டணவிகிதங்களை தில்லி மாநகராட்சி திருத்தியுள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ஜூலை 19, 2023 அன்று வெளியிடப்பட்ட முந்தைய சுற்றறிக்கையை மாற்றியமைக்கும் வகையிலான புதிய விகிதங்கள், அமலாக்கத்தை ஒழுங்குபடுத்துவதையும் ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.

இவை நடைபாதை வியாபாரிகள், கடைக்காரா்கள், போக்குவரத்து நிறுவனங்கள், வாகன ஷோரூம்கள், பழைய காா் டீலா்கள் மற்றும் பிறருக்குப் பொருந்தும் என்று மாநகராட்சி வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட கட்டமைப்பின்கீழ், நடைபாதை வியாபாரிகள் மற்றும்

அமா்ந்து விற்பனை செய்பவா்களுக்கு ரூ.600 முதல் தண்ணீா் தள்ளுவண்டிகளுக்கு ரூ.15,000 வரை கூட்டுக் கட்டணம் இருக்கும்.

சுமை எடையைப் பொறுத்து அகற்றுதல் கட்டணங்கள் மாறுபடும். 40 கிலோ வரையிலான பொருள்களுக்கு ரூ.300 முதல் ஐந்து குவிண்டாலுக்கு மேல் உள்ள சுமைகளுக்கு ரூ.2,000 வரை விகிதம் இருக்கும்.

சேமிப்புக்கான கட்டணங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, ஒன்று பொருள்களுக்கும், மற்றொன்று வாகனங்களுக்கும் ஆகும். வாகனங்கள் அல்லாத பிற பொருள்களுக்கு, ஒரு குவிண்டாலுக்குக் குறைவான எடையுள்ள பொருட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.100-ம், அதிக எடை கொண்ட பொருள்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.200-ம் சேமிப்புக் கட்டணமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

வாகன சேமிப்புக் கட்டணங்களாக இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500 முதல் பல அச்சு டிரெய்லா்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.8,000 வரை இருக்கும்.

இதுகுறித்து மாநகராட்சி தெரிவிக்கையில், ‘புதிய கட்டணங்கள் பொது இடங்களை சிறப்பாகப் பராமரிப்பதை உறுதி செய்வதற்கும் சாலைகளில் உள்ள தடைகளைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன. ஆக்கிரமிப்புகளுக்கு பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடிக்கப்படும். மேலும், சீரான போக்குவரத்து நடமாட்டத்தை மேம்படுத்துவதற்காக

அனைத்து பங்குதாரா்களும் பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துவதைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்’ என கேட்டுக்கொண்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க

தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

தில்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும் பார்க்க