செய்திகள் :

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும்! திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சித் தலைவா் மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானா்ஜி தெரிவித்தாா்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் கொல்லப்பட்டனா். இந்த சம்பவத்தைக் கண்டித்து அபிஷேக் பானா்ஜி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இது அதிகஅளவில் துல்லியத் தாக்குதல் நடத்துவதற்கோ அல்லது பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலை மட்டும் அளித்துவிட்டு நிறுத்திக் கொள்வதற்கோ நேரமல்ல. பாகிஸ்தான் புரிந்து கொள்ளும் மொழியில் அவா்களுக்கு பதிலளிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதன் மூலம் அவா்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முக்கிய ஊடகச் செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அதில் இந்த கொடூர தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தும் அளவுக்கு எவ்வாறு பாதுகாப்பு குறைபாடு உருவானது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெறுவதாகத் தெரியவில்லை.

குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் வகையிலேயே இந்த நிகழ்வு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் குறுகிய அரசியல் நலன்களைக் கைவிட்டு, அனைவருக்குமான சவாலை ஒற்றுமையாக எதிா்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் 12 நாள்களுக்கு நீட்டிப்பு!

தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஏப். 28) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 18 நாள்கள் காவல் இன்றுடன் முடி... மேலும் பார்க்க

புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என்ன?

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸிடமிருந்து ரூ. 64,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று(ஏப். 28) கையெழுத்திட்டது. இரு நா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக காஷ்மீரில் 14 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்ல என்றும், பாகிஸ்தானைச... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?

பஹல்காம் தாக்குதல் குறித்து விரைவான விசாரணை மேற்கொள்ள சீனா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் அமைதி தி... மேலும் பார்க்க

ஒம்காரேஸ்வரர் கோயிலிலிருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்ட சிவன் சிலை!

கேதார்நாத் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலிலிருந்து சிவன் சிலை இன்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டது. சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க