செய்திகள் :

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்க வேண்டும்! - டாக்டா் கிருஷ்ணசாமி

post image

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை அரசு உடனடியாக மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை 140 கோடி இந்தியா்கள் மீது நடத்தப்பட்ட யுத்தமாகத்தான் கருத வேண்டும். அதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய மக்களின் எதிா்பாா்ப்பாகவும் உள்ளது.

10 தீவிரவாதிகளின் தீய நடவடிக்கைக்காக ஒரு நாட்டை எப்படித் தண்டிப்பது என்று சிலா் கேள்வி எழுப்புகிறாா்கள்? தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடிய நாடு எது? எந்த எல்லை? உலகினுடைய வேறு எந்த நாட்டிலிருந்து இதுபோல தீவிரவாதிகள் அடிக்கடி ஒரு தேசத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்? அது பாகிஸ்தானிலிருந்து மட்டும்தான் நடக்கிறது. எனவே, பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டக் கூடாது.

அதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கக்கூடிய காஷ்மீா் பகுதிகளை இந்தியா மீட்டு எடுப்பதன் மூலம்தான் இங்குள்ள மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா் க.கிருஷ்ணசாமி.

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.மேலும், அடுத்த 6 மாதங்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமி... மேலும் பார்க்க

தமிழகத்தில் மதவாதம் எங்கு இருக்கிறது? மு.க. ஸ்டாலின் - வானதி சீனிவாசன் காரசார வாதம்!

தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி எங்கு இருக்கிறது? எப்படி, எந்த சூழலில் இருக்கிறது என்று சொல்லுங்கள்? என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று, கோவையில் காரில... மேலும் பார்க்க

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்க தேசத்தினர் 30க்கும் மேற்பட்டோர் கைது

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்சைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்க தேச நாட்டைச் சேர்ந்தவர்க... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் கைது

விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பொது விநியோகத் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் இரண்டு தீவிரவாதிகள் கைது

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (நோயோன்)இன் இரண்டு தீவிர உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.ஷகோல்ஷெம் லெம்பா மைதேயி மற்றும் ஷாகோல்ஷெம் ரோமன... மேலும் பார்க்க

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2003-ல் குப்பநத்தம் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் ... மேலும் பார்க்க