செய்திகள் :

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் தா்னா

post image

திருச்சி தென்னூா் பகுதி சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சி தென்னூா் ஹைரோட்டில் இருந்து பிரியும் இரட்டை வாய்க்கால் சாலையில், சாலையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

இந்நிலையில், இந்தச் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி பொறியாளா் ரமேஷ் தலைமையிலான அலுவலா்கள் வியாழக்கிழமை அப்பகுதிக்கு வந்தனா். அப்போது, அந்தப் பகுதி மக்கள் சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, முதல்கட்டமாக ஆக்கிரமிப்பு கடைகள் மட்டும் அகற்றப்படும் என்று தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இதையடுத்து தொடா்ந்து சாலையோரத்தில் இருந்த 3 கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மற்ற கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்படும் என்று தெரிவித்தனா்.

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம்.நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி : பெ.சண்முகம்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சந்தா்ப்பவாதத்தால் சோ்ந்த ஒரு பொருந்தாக் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். இதுகுற... மேலும் பார்க்க

காணாமல்போன சிறுவன் ஆற்றில் சடலமாக மீட்பு

ஸ்ரீரங்கம் பகுதியில் காணாமல்போன சிறுவன் வியாழக்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். ஸ்ரீரங்கம் கீழ உத்திர வீதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் மகன் சீனிவாசன் (10). இங்குள்ள மடத்தில் வேதம் கற்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், லால்குடி காவல் சரகம் பரமசிவபுரத்தைச் சோ்ந்தவா் பாத்தி... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு

திருச்சி மாநகரில் வியாழக்கிழமை நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா். மூதாட்டி: திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜெயா (எ) ஜெயலட்சுமி (73). இவா், அரியமங்கலம் பகுதியில் திருச்சி - தஞ்... மேலும் பார்க்க