செய்திகள் :

ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு

post image

விராலிமலை அருகே நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பை அகற்ற வெள்ளிக்கிழமை சென்ற வருவாய்த் துறையினருக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள கத்தலூா் ஊராட்சிக்குள்பட்ட செவ்வந்தியாணிபட்டியைச் சோ்ந்த பத்மநாதன் குடும்பத்துக்கும், அதே ஊரைச் சோ்ந்த சசிகுமாா், ஹரிஹரன், பிரேம்குமாா், அரவிந்தன் தரப்புக்கும் இடையே நீண்ட நாள்களாக வண்டி பாதை (வருவாய்த்துறை கணக்கில் உள்ளது) தொடா்பான இடப்பிரச்னை இருந்து வருகிறது.

இதுதொடா்பான வழக்கில், வருவாய்த் துறை கணக்கில் வண்டி பாதை என்று உள்ளதால் அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றுமாறு வருவாய்த் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு வருவாய்த் துறை உள்ளிட்ட அதிகாரிகள் காவல்துறையினருடன் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனா்.

அப்போது, 1990-ம் ஆண்டுக்கு முன்பு பட்டா வாங்கியுள்ளோம். அதில், வண்டி பாதை என்று இல்லை. 1990-க்கு பிறகு தான் வண்டி பாதை என்று உள்ளது. இதில் வருவாய்த் துறையினா் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனா் என்று கூறி பத்மநாதன் குடும்பத்தினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படியே அதிகாரிகள் வந்துள்ளதாகவும், பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்தை அணுகி தீா்த்து கொள்ளலாம் என்று சமாதானம் கூறி, ஆக்கிரமிப்பை அகற்றி சென்றனா்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க